வடக்கு ஆளுனரின் ஒப்புதலுக்கு தடைவிதிக்கக் கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு!

திவிநெகும சட்டமூலத்துக்கு வடக்கு மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி ஒப்புதல் அளிப்பதற்குத் தடைவிதிக்கக் கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழக்குத் தொடுத்துள்ளது. வடக்கு மாகாணசபை இன்னமும் தெரிவு செய்யப்படாத நிலையில், வடக்கு மாகாண ஆளுனரின் ஒப்புதலுடன் திவி நெகும சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற சிறிலங்கா அரசாங்கம் முற்படுகிறது. இந்தச் சட்டமூலத்துக்கான ஒப்புதலை வடக்கு மாகாண ஆளுனர் ஏற்கனவே அனுப்பி வைத்துள்ளார். நேற்று கிழக்கு மாகாணசபையிலும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவுடன் இந்த சட்டமூலத்துக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. … Continue reading வடக்கு ஆளுனரின் ஒப்புதலுக்கு தடைவிதிக்கக் கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு!